(e‹¿ TeacherTn.com)
Posted:
22 Dec 2012 09:32 AM PST
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக
பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம்
வழங்கப்படவில்லை. இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது , "உயர்நீதிமன்றத்தின்
தீர்ப்புப்படி இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க
இயலாது" என விளக்கமளித்ததால்,
இதனால் பலர்
நீதிமன்றத்தை அனுகினர்.
இதையடுத்து வழக்கு தொடுத்துள்ள 13
ஆசிரியர்களுக்கும்
13 பணி இடங்களை
தற்காலிகமாக ஒதுக்கியும் இப்பணியிடங்கள் ஏற்கனவே விசாரணையில் இருக்கும் அனைத்து TET நியமனம்
தொடர்பான இறுதித்தீர்புக்கு உட்பட்டது என்றும்,
இதுகுறித்து
விளக்கத்தினை 15 நாட்களுக்குள்
அளிக்க அரசுக்கும்
கல்வித்துறைக்கும் உயர்நீதி மன்றநீதிபதி திரு. வெங்கடராமன் உத்தரவிட்டார்.
Comments
Post a Comment