2019 ல் நடந்த முதுகலை கணினி பயிற்றுநர் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் பணி நியமனதிற்கு தாமாதம் எற்டுத்தியதாக நீதிபதி கண்டித்து வழக்கை முடித்து வைத்தார்.
முதுகலை கணினி பயிற்றுநர் (நிலை-I)🖥️ இரு நபர் ஆணையத்தின் தீர்ப்பு விவரம் பின்வருமாறு,⚖️📓 இரு நபர் ஆணையம் தலைமை: 1. நீதிபதி.திரு. ஆதிநாதன் (ஒய்வு) 2. திரு.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, IPS., IG (ஒய்வு) 🔖நாங்கள் இருவரும்(Two Man Committee) திறந்த மனதுடன் தேர்வில் தோல்வியடைந்த நபர்களின் புகார்களையும், கோரிக்கைகளையும் பரிசீலித்தோம். ஆனால் அளிக்கப்பட்ட புகார்களில் உள்ள உண்மையும், நேர்மையும் இறுதி வரை எங்களால் மெய்ப்பிக்க இயலவில்லை. 🔖அவர்களின் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையிலும், செவிவழிச் செய்திகளாகவும் மட்டுமே இருக்கின்றன. 🔖குற்றச்சாற்று செலுத்தியவர்கள் தேர்வை ஒரு மையத்திலும், குற்றச்சாட்டை வேறு ஒரு மையத்தின் மீதும் வைக்கின்றனர். மேலும் அந்த குற்றச்சாட்டு அனைத்தும் உண்மையற்றவை, ஊகத்தின் பெயரிலும், அதீத கற்பனையின் விளைவாக உருவாக்கப்பட்டவை என விசாரணையில் தெரிய வருகிறது. 🔖இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆய்வு செய்தபோது ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது, இவை அனைத்தும் தேர்வில் தோல்வியுற்றவர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா என்கின்ற அடிப்படையில்